Tuesday, June 29, 2010

அதிரையில் இரயில் மறியலுக்கு முயன்ற 20 பேர் கைது

அகலப்பாதை அமைக்க வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் அதிரை சுற்றுவட்டார மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனால் இன்று இரயில் மறியல் போராட்டத்தை அதிரை போராட்டக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று சுமார் 500 பேர் இரயில் மறியல் செய்ய காலை 10 மணிக்கு இரயில் நிலையம் நோக்கி சென்றனர். அவர்களில் 20 பேரை மட்டும் கைது செய்து சாரா கல்யாண மன்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிரை வழியாக இன்று செல்லும் அனைத்து இரயில்களும் சென்ற பிறகே அவர்கள் விடுவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்றிரவே சிலரை போலிசார் கைது செய்ய இருந்ததாக அறிய முடிகிறது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!