Friday, July 30, 2010

துணிந்து நின்றால் பணிந்து வருவார்கள்

நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளில்இஸ்ரா-மிஃராஜ் பயணம் முக்கியமானதாகும். ஒரே இரவில் நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் மூலமாக மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்து பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்நிகழ்வு ‘இஸ்ரா’ என அழைக்கப்படுகின்றது.

பின்னர் அங்கிருந்து விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது ‘மிஃராஜ்’ என அழைக்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சியை ஒட்டி எத்தகைய சடங்கு-சம்பிரதாயங்களையோ, வணக்க, வழிபாடுகளையோ இஸ்லாம் அறிமுகம் செய்யவில்லை. இந்நிகழ்வு பற்றிப் பேசுவோர் பல கட்டுக் கதைகளையும், பர்ன-பரம்பரைக் கதைகளையும் அவிழ்த்து விடுவர். மற்றும் சிலர் இஸ்ரா -மிஃராஜுடன் இணைத்து இல்லாத இபாதத்துக்களை உருவாக்கி பித்அத்துக்களை ஊக்குவிப்பர். எனினும், இஸ்ரா-மிஃராஜ் பற்றிப் பேசும் போது பைத்துல் முகத்தஸ் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.

‘பைத்துல் முகத்தஸ்’ என்பது முஸ்லிம் உம்மத்தின் முதல் கிப்லாவாகும். பலஸ்தீன பூமி அல்லாஹ்வின் அருள் பெற்ற பூமியாகும். ‘பைத்துல் முகத்தஸைச் சூழ உள்ள பூமியை நாம் பறக்கத் பொருந்தியதாக ஆக்கியுள்ளோம்’ என்று அல்லாஹ் கூறியுள்ளான். இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தளமாக பைத்துல் முகத்தஸ் திகழ்கின்றது. நபிகளாரின் இஸ்ரா-மிஃராஜின் ஒரு அங்கமான பைத்துல் முகத்தஸ், மனித இன விரோதிகளான இஸ்ரேல் வசம் சிக்கித் தவிக்கின்றது. அகழ்வாராய்ச்சியின் பெயரில் பைத்துல் முகத்தஸைச் சூழச் சுரங்கங்கள் தோண்டித் துலாவப்படுகின்றது. பலஸ்தீனத்தின் பூர்வக் குடிகள் ஆக்கிரமிப்புச் சக்திகளான இஸ்ரேலினால் திறந்த வெளிச் சிறைக் கைதிகளாக நடத்தப்படுகின்றனர்.

அமெரிக்காவும், பிரிட்டனும் கொண்ட கள்ளக் காதலால் கருத்தரித்த சட்ட விரோத நாடே இஸ்ரேலாகும். இதன் மொஸாட் அமைப்பும், அதன் கொலை வெறிக் கூட்டமான ஸியோனிஸ்டுகளும் உலகம் பூராகவும் போர்த் தீயை மூட்டி வருகின்றனர்.

இஸ்லாமிய உம்மத்துக்கு மட்டுமன்றி மனித இன விரோதிகளாகவே இஸ்ரேல்நடக்கின்றது. அதனது ஸியோனிஸ சிந்தனை என்பது அனைத்து இன மக்களையும் அடிமையாக்கும் சிந்தனை கொண்டதாகும்.

இஸ்ரேல் அரசும் அதன் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் அரசியல் தலைமைகள், பிர்அவ்னியச் சிந்தனையுடன் இஸ்லாமிய உம்மத்தின் குழந்தைகளைக் கொல்வதைக் கொள்கையாகக் கொண்டுள்ளன. ஈராக், ஆப்கான், பலஸ்தீன் என அனைத்து நாடுகளிலும் இந்த அரக்க நாடுகளின் ஈவு-இரக்கமற்ற, காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்களில் அதிகம் பலியானவர்கள் ஒன்றுமறியாக் குழந்தைகள்தான்.

‘பொருளாதாரத் தடை’ என்ற போக்கிரிச் சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு உணவு, பால் மா, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதைத் தடை செய்வதன் மூலம் இஸ்லாமியச் சந்ததியைக் கொன்றொழிக்கச் சதி வேலையில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்திப் பிறக்கும் குழந்தைகளையும் உடல் ஊனமுற்றவர்களாக்கும் கொடூரத்தை இந்த நாடுகள் செய்து வருகின்றன.

பலஸ்தீனை ஆக்கிரமித்து ‘இஸ்ரேல்’ என்ற சட்ட விரோத நாட்டை உருவாக்கியவர்கள், அதனை ஒரு யூத நாடு என நிருவுவதற்கான அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வந்தனர். அறுபது ஆண்டுகள் தோண்டித் துலாவியும் இது ஒரு யூத நாடு என்று நிருவுவதற்கு உருப்படியான ஒரு ஆதாரம் கூட அவர்களுக்குக் கிட்டவில்லை. இந்நிலையில் யூதர்களில் சிலரே ‘இஸ்ரேல் சட்ட விரோத நாடு!’, ‘இஸ்ரேலை உருவாக்கியமை யூத மதத்திற்கும் எதிரானது!’ எனக் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

பலஸ்தீனின் காஸாப் பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டுப் பலஸ்தீனப் பாலகர்களையும் பட்டினிச் சாவுக்குள்ளாக்கி வருகின்றது. மருந்துத் தட்டுப்பாட்டினால் மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

பட்டினி நிலை தொடர்ந்ததைக் கண்ட ஈரநெஞ்சம் கொண்ட உலக நாடுகள் உதவ முன் வந்த போதும் கூட கல்நெஞ்ச இஸ்ரேல் அதனைத் தடுத்து வந்தது. எகிப்து ஊடாக காஸா பகுதிக்கு உணவு வருவதை எகிப்து தடை செய்தது. பட்டினியின் கொடூரத்தால் சுரங்கப் பாதை அமைத்து காஸாவுக்கு உணவுகளைக் கொண்டு வரும் முயற்சியை எகிப்து கொடூரமாக நசுக்கியது. மதில்கள் அமைத்தும் சுரங்கப் பாதைகளுக்கு நச்சு வாயு அடித்தும் பிர்அவ்னிய சிந்தனையின் எச்ச-சொச்சத்தை எகிப்தின் அதிபர் நிரூபித்து வருகின்றார். முஸ்லிம் அல்லாத மனித நேயர்களின் மனிதாபிமான முயற்சிகளுக்குக் கூடத் தடை விதித்துப் பலஸ்தீனப் பட்டினிச் சாவுக்கு இஸ்ரேலுடன் இணைந்து எகிப்தும் வழிவகுத்து வருகின்றது.

காஸாப் பகுதிக்கு 2008 இல் S.S. Free gaza பயணய கப்பல் மூலம் சென்ற மனிதாபிமான உதவியின் பின்னர் எந்த உதவியும் சென்று சேருவதை இஸ்ரேலின் இதயமற்ற அரசு அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில்தான் பலஸ்தீன மக்களின் மரண ஓலமும், பட்டினிச் சாவும் சர்வதேச நாடுகளில் இதயமுள்ள மனிதர்களின் உள்ளத்தை உருக்கியது.

இஸ்ரேலினதும், எகிப்தினதும் முற்றுகையைத் தகர்த்து காஸா மக்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு குழு தயாரானது.

பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ், துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த 6 கப்பல்கள் மே மாதம் 30 இல் சைப்பிரஸ் துறைமுகத்திலிருந்து காஸா நோக்கிச் சென்றது. இந்தக் கப்பலில் 50 நாடுகளைச் சேர்ந்த மனித நேயத் தொண்டர்கள் 700 பேர் பயணித்தனர். இதில் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்ற மக்கள் தொண்டர்கள், பலஸ்தீன ஆதரவாளர்கள் என நாடு-அரசியல்-இன-மதம் அனைத்தையும் தாண்டிய மனித நேயம் கொண்டவர்கள் உள்ளடங்கியிருந்தனர். இந்தக் கப்பல்களில் 10,000 டொன் உதவிப் பொருட்கள் இருந்தன.

இந்தக் கப்பல் காஸா சென்றடைந்தால் பலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கும் தனது சதிவலை முறியடிக்கப்பட்டு விடும். ஏனைய நாடுகளும் தொடர்ந்து உதவி செய்ய ஆரம்பித்து விடும் என்பதனால் இவர்களைத் தண்டிப்பதற்காகவும், இனி யாரும் உதவி-ஒத்தாசை என்று வந்து விடக்கூடாது என எச்சரிப்பதற்காகவும் இஸ்ரேல் இவர்களைத் தாக்கியது.

சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இஸ்ரேல் இராணுவத்தினரால் இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். கப்பலில் பயணித்தவர்கள் சமாதான சமிக்ஞை காட்டியும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து 19 பேரைக் கொன்று குவித்தது. இதில் 12 பேர் படுகாயமுற்றனர். காயப்பட்டு உயிர் தப்பியவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவார்.

சர்வதேசக் கடல் பரப்பில் சர்வதேசச் சட்டங்களைத் தனது கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்து விட்டு, மனித நேய மக்கள் தொண்டர்களைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் இராணுவத்தினர், அவர்களை நடுக் கடலில் தூக்கி வீசியுமுள்ளனர்.

தனது ஈவிரக்கமற்ற ஈனச் செயலை நியாயப்படுத்த வழமை போன்று ‘தற்காப்புத் தாக்குதல்’ எனப் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளது இஸ்ரேல். கப்பல்களில் இருந்தவர்கள் குண்டர்கள் அல்ல; மனித நேய மக்கள் தொண்டர்கள்! தாலிபான், அல்கய்தா போன்ற ஆயுதப் போராளிகள் அல்ல; சமாதானப் விரும்பிகள். முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அதில் அதிகம் இருந்தனர்.

இஸ்ரேலின் இதயத்தில் ஈரமற்ற இந்த ஈனச் செயலுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு உலகெங்கும் எழுந்துள்ளது. துருக்கி இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. அமெரிக்க சார்பு முஸ்லிம் நாடுகளுக்கு இந்நிகழ்வு அரசியல் ரீதியான சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.

இந்நிகழ்வு இஸ்ரேல் சர்வதேசச் சட்டங்களை மதிக்காத நாடு; அது எந்த அக்கிரமத்தைச் செய்து விட்டும் அதற்கு நியாயம் கற்பிக்க முனையும். இது வரை இஸ்ரேல் மேற்கொண்ட எல்லா பயங்கரவாத வன்முறை நிகழ்வுகளையும் ‘தற்பாதுகாப்புத் தாக்குதல்’ என்றுதான் நியாயப்படுத்தி வந்தது. இந்நிகழ்வின் மூலம் சர்வதேச சமூகத்தின் முன்னால் இஸ்ரேலின் கோர முகம் பளிச்செனத் தெரிய ஆரம்பித்துள்ளது.

எனினும், அமெரிக்காவின் அரசியல் ஒத்துழைப்புத்தான் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டிப் போக்கிற்கும், இரும்புக் குணத்திற்கும் காரணமாகும். முஸ்லிம் தலைமைகள் துணிவுடனும், ஒன்றுபட்ட மனதுடனும் செயற்பட்டால் இந்த நிலையை மாற்ற முடியும். இதற்கு இலங்கை சிறந்த உதாரணமாகும்.

புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள்இலங்கையைப் பணிய வைக்கப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தன. ஆனால், ஜனாதிபதி தலை வணங்காத தலைமையாக நின்று அதனை எதிர்கொண்டார். அதன் பின் அரசியல் மாற்றத்தின் மூலம் இலங்கையை அடிபணியச் செய்ய முயற்சி நடந்தது. அதுவும் பழிக்கவில்லை. இந்தியா, சீனா எனப் பிராந்திய அரசுகளுடன் இலங்கை நெருக்கத்தை அதிகரித்தது. இப்போது அமெரிக்காவே பணிந்து வர வேண்டிய சூழ்நிலை உருவானது. தற்போது அமெரிக்காவேஇலங்கையின் சில நடவடிக்கைகள் குறித்துத் தாம் திருப்திப்படுவதாக ஒரு தலைப்பட்சமான டயலொக் பேச வேண்டியேற்பட்டது. அமெரிக்காவுக்கு அரசியல் தேவை இருந்தால் பணிய வைக்கப் பயமுறுத்தும்; பயப்படவில்லை என்றால் பணிந்து வரும். இதற்கு வட கொரியாவும் ஒரு சிறந்த உதாரணமாகும்.

முஸ்லிம் உலகு அமெரிக்காவின் பொருளாதார முதுகெலும்பை முறிக்கும் முடிவுகளை எடுத்து, ஒன்றிணைந்து, துணிந்து குரல் கொடுத்தால் அமெரிக்காபணிந்து வரும். அமெரிக்கா பணிந்தால் இஸ்ரேலின் அராஜகமும், அக்கிரமமும் குன்றிக் குறைந்து விடும் எனத் துணிந்து சொல்லலாம்

Monday, July 19, 2010

முஸ்லிம் லீக்கில் வக்கீல் முனாஃப்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் அதிரையில் நடைப்பெற்றது. முன்னதாக கட்சியின் அமைப்புத் தேர்தல் நடந்தது. அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் தஞ்சை மாவட்ட செயலாளராக வக்கீல். அப்துல் முனாஃப் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்பு அதிமுகவின் முக்கிய பொருப்பு வகித்தவர்.

ஆளும் கட்சி அல்லது எதிர் கட்சியாகவும் இருந்துவரும் அதிமுகவிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்து உள்ளார்

Sunday, July 18, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும்

மரண அறிவிப்பு புதுமனை தெருவை சேர்ந்தசேகனா காக்கா அவர்களின் மகனும் சலீம் அவர்களின் தம்பியுமான சமீர் அவர்கள் நேற்று மாலை சென்னையில் காலமாகிவிட்டார்


இன்னாளில்லாஹி இன்னா இலைஹிராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"


எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீ

ன்.

Friday, July 16, 2010

இந்திய ரூபாய்க்கு புதிய சின்னம்

சர்வதேச அங்கிகாரம் பெற்ற நாணயங்களுக்கு குறியீடுகள் இருக்கின்றன. அந்தவகையில் இந்திய ரூபாய்க்கும் புதிய சின்னமொன்றினை இந்திய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்திய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜி நாடாளுமன்றில் வரவு- செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றும்போது சர்வதேச தரத்தின் இந்திய கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இந்திய ரூபாய்க்கு சின்னமொன்றினை உருவாக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய ரூபாய்க்கு சின்னம் உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. வெற்றிபெறுபவருக்கு இந்திய ரூபாய் 2.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
அதற்கமைய அனுப்பிவைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சின்னங்களை ஐந்துபேர்கொண்ட நடுவர்குழு பரிசீலித்து, அதில் ஐந்து சின்னங்களை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. அந்த ஐந்து சின்னங்களிலிருந்து கான்பூரில் ஐஐடி படிக்கும் மாணவர் உதயக்குமார் உருவாக்கிய சின்னத்தினை தேர்வுக்குழு தெரிவுசெய்திருக்கிறது. இந்திய மத்திய அரசினால் தெரிவுசெய்யப்பட்ட ரூபாய் சின்னத்தினை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தி உரையாற்றும்போது… இந்திய நாணயத்தின் மதிப்பு சர்வதேச மட்டத்தில் உயர்ந்திருக்கும் இத்தருணத்தில் இந்தச் சின்னம் அறிமுகப்படுத்தியிருப்பது பொருத்தமானதே. இன்றும் ஆறு மாதங்களில் இந்தச் சின்னம் நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிட்டார். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் ரூபாயினைப் பயன்படுத்திவருகின்றன. சின்னத்தினை உருவாக்கிய உதயக்குமார் குவஹாத்தியிலுள்ள ஐஐடியில் நாளை பேராசிரியராக பணியில் இணைகின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Thursday, July 15, 2010

மக்கள் தொகை கணக்கு எடுக்க அதிகாரிகள் வீட்டுக்கு வராவிட்டால்?


தமிழகம் மற்றும் புதுவையில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் அரசுத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர் அந்த பணி இன்றுடன் முடிவடைகிறது.மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு இதுவரை வராவிட்டால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
அடுத்த 15 நாள்களுக்குள் உங்களுடைய விவரங்களை அவர்களிடம் தெரிவிக்கலாம் இதுவரை அதிகாரிகள் உங்களுடைய வீடுகளுக்குவராவிட்டால்இங்குகொடுக்கப்பட்டுள்ளதொலைபேசிஎண்களை
தொடர்பு கொண்டு உங்களுடைய வீட்டின் முகவரியைக் கூறினால் அதிகாரிகள் நேரில் வந்து உங்களை பற்றிய தகவல்களை சேகரித்து கொள்வார்கள்.
தொலைபேசி எண்கள்: 18003450111 மற்றும் 1800110111
(கட்டணமில்லாத் தொலைபேசி), 044-24912993.
இணையதள முகவரி: npr.tn@nic.in

இன்றைய உலகத்தின் நிலை

Tuesday, July 13, 2010

அதிரை பைத்துல்மால் ஜூன்-2010 மாதச் சேவைகள்

அதிரை பைத்துல்மால் ஒவ்வொரு மாதமும் தனது சேவைகளை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. ஜூன்-2010 சேவைகள் தற்போது வெளியாகியுள்ளது.





Monday, July 12, 2010

உலக கோப்பை வென்ற ஸ்பெயின்

உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது.


இதன் மூலம் பால் "ஆக்டோபஸ்' கணிப்பு மீண்டும் ஒரு முறை பலித்துள்ளது. நெதர்லாந்து வெற்றி பெறும் என்ற சிங்கப்பூர் கிளியின் கணிப்பு பொய்யாகிப் போனது.


தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த பைனலில் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், நெதர்லாந்தை(4வது இடம்) எதிர்கொண்டது. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை கைப்பற்றும் குறிக்கோளுடன் களமிறங்கின.

Font size

ஸ்பெயின் ஆதிக்கம்: துவக்கத்தில் "யூரோ' சாம்பியனான ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் "பிரீகிக்' வாய்ப்பில் சேவி, பந்தை அடித்தார். அதனை செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோல் அடிக்க பார்த்தார்.


ஆனால், நெதர்லாந்து கோல்கீப்பர் மார்டன் ஸ்டகலன்பர்க் துடிப்பாக தடுக்க, வாய்ப்பு நழுவியது. 11வது நிமிடத்தில் மீண்டும் ரமோஸ் தாக்குதல் நடத்தினார். இம்முறை நெதர்லாந்து தற்காப்பு பகுதி வீரர் ஹெடிங்கா, பந்தை உதைத்து வெளியே அனுப்பினார்.


பின் நெதர்லாந்து வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் மோதிப் பார்க்க, இங்கிலாந்து நடுவர் ஹாவர்டு, மாறி மாறி "எல்லோ கார்டு' காட்டி எச்சரித்தார்.


நெதர்லாந்து தரப்பில் பெர்சி, பொம்மல் மற்றும் ஸ்பெயின் சார்பில் ரமோஸ், புயோல் "எல்லோ கார்டு' பெற்றனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர்லாந்து வீரர் நிஜல் டி யாங்கும் "எல்லோ கார்டு' பெற்றார். முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.


இரண்டாவது பாதியிலும் "அடிதடி' ஆட்டம் தொடர்ந்தது. 54வது நிமிடத்தில் "பவுல்' செய்த நெதர்லாந்து கேப்டன் பிரான்க்ஹார்ஸ்ட் "எல்லோ கார்டு' பெற்றார். 62வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபன், பந்தை மின்னல் வேகத்தில் கடத்தி வந்து "ஷாட்' அடித்தார். ஆனால், ஸ்பெயின் கீப்பரும் கேப்டனுமான கேசில்லாஸ் சாதுர்யமாக தடுக்க, பொன்னான வாய்ப்பு வீணானது.


டேவிட் ஏமாற்றம்: இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா இம்முறை ஏமாற்றம் அளித்தார். 69, 76வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை வீணாக்கினார். பின் ஸ்பெயின் வீரர் ரமோஸ் தலையால் முட்டி அடித்த பந்தும் இலக்கு மாறி பறந்தது.

எங்கே ஸ்னைடர்: ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ராபன் அசுர வேகத்தில் ஓடி வந்து கோல் அடிக்க பார்த்தார். அப்போது ஸ்பெயின் வீரர் புயோல் தடுக்க, வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து நடுவருடன் வாதாடினார் ராபன். இதற்காக ராபனும் "எல்லோ கார்டு' பெற்றார்.

இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள நெதர்லாந்தின் ஸ்னைடரின் ஆட்டம் நேற்று சுத்தமாக எடுபடவில்லை. இவர் இருக்கும் திசையில் பந்து வருவதே அரிதாக இருந்தது. இரு பாதி முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

"ரெட் கார்டு' சோகம்:

இதையடுத்து போட்டி, கூடுதல் நேரத்துக்கு சென்றது. 106வது நிமிடத்தில் ஸ்பெயின் சார்பில் டேவிட் வில்லாவுக்கு பதிலாக பெர்ணான்டோ டோரஸ் களமிறக்கப்பட்டார். 109வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை முரட்டுத் தனமாக தடுத்த நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 பேருடன் நெதர்லாந்து விளையாட நேர்ந்தது.

ஸ்பெயின் கோல்:


ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஒரு சூப்பர் கோல் அடித்து, அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பை கைப்பற்றியது.


கடந்த 1974, 78 பைனலில் தோல்வி அடைந்த நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டு, இரண்டாம் இடம் பிடித்தது.

ரூ. 142 கோடி பரிசு

Friday, July 9, 2010

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்


அஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.

சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது.



இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர், பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.




.

Thursday, July 8, 2010

11ம் தேதி முழு சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியாது

வரும் 11ம் தேதி அரிய முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

இந்திய நேரப்படி இரவு 10.39 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.27 மணிவரை சுமார் 5 மணி நேரம் இந்த சூரிய கிரகணம் நீடிக்கும்.

நள்ளிரவு 1.03 மணிக்கு உச்ச நிலையை அடையும். அப்போது சூரியனை நிலா முழுமாயாக 5.25 நிமிடங்கள் மறைத்திருக்கும். இந்த நேரத்தில் பூமியின் அனைத்துப் பகுதிகளும் முழுமையாக இருளில் மூழ்கும்.

ஆனால், 11ம் தேதி அமாவாசை என்பதால், இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியாது.

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியிலும், அர்ஜென்டினா, சிலி போன்ற தென்
அமெரிக்க நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை முழு அளவில் காண முடியும்.

ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் படமெடுத்த ஐரோப்பிய செயற்கைக்கோள்

ஐரோப்பிய விண்வெளி ஆராச்சி மையத்தின் பிளாங்க் கனல்சா என்ற செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒரே புகைப்படமாக எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரே புகைப்படமாக நமக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த புகைப்படத்தின் மூலம் பிரபஞ்சம், நடத்திரங்கள், கோள்கள், தாதுக்கள், உயிர்கள் உருவானது குறித்த ஆய்வுகள் மேலும் மேம்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 'பிங் பேங்' எனப்படும் பேரண்ட வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் உருவானது.

அப்போது உருவான ஒளியி்ன் மிச்சத்தையும் இந்த செயற்கைக் கோள்
படம் [^] பிடித்துள்ளது. இந்தப் படத்தின் நடுப் பகுதியில் காணப்படும் வெள்ளை நிற ஒளிக் கோடு நமது சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலத்தில் (Milky Way galaxy) இருந்து வெளியாகும் கதிர்வீச்சாகும்.

படத்தின் இரு ஓரங்களிலும் காணப்படும் ஒளி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேரண்ட வெடிப்பில்போது உருவான முதல் ஒளியின் மிச்சமாகும்.

இந்தப் படம் நமக்குக் காட்டுவது பிங்-பேங் வெடிப்பைத் தொடர்ந்து பரவிய தூசி, வாயு மண்டலங்களின் கதிர்வீச்சு தான். இந்தக் கதிர்வீ்ச்சைத் தான் பிளாங்க் செயற்கைக் கோளில் உள்ள மைக்ரோவேவ் தொலைநோக்கி தனது இன்ப்ரா-ரெட் (Infra red) லென்ஸ் மூலம் படம் பிடித்துள்ளது.

இந்த முழுப் படமும் இன்ப்ரா ரெட் கதி்ர்வீச்சை 9 அலைவரிசைகளாகப் படம்பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.

கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் செயற்கைக்கோள் நேற்று இந்தப் படத்தை எடுத்தது.

இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமத்தின் அறிவியல், ரோபோட்டிக் பிரிவு
இயக்குநர் [^] டேவிட் செளத்உட் கூறுகையில், இந்தப் படம் நமது பிரபஞ்சம் குறித்தும், அது உருவான விதம், நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பு, பிங் பேங் விட்டுச்சென்ற வெப்பத்தின் அளவு உள்ளிட்டவற்றை கணிக்க உதவும் என்றார்.

விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள பிளாங்க் செயற்கைக்கோள் 2012ம் ஆண்டு வரை செயல்படும். அதற்குள் பிரபஞ்சத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து இதேபோன்ற மேலும் நான்கு புகைப்படங்களை அது அனுப்பவுள்ளது.

உலக கோப்பை கால்பந்தாட்டத்தை இணையத்தில் இலவசமாக பார்க்கலாம்

உலக கோப்பை கால்பந்தாட்டத்தை நேரடியாக இணையத்தில்இலவசமாக கண்டுகளிக்க இங்கே அழுத்திப் பாருங்கள். அனைத்து விளையாட்டு சனல்களையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதாகவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சில தமிழ் தொலைக்காட்சிகளையும் நேரடியாக கூட பார்க்கலாம்.

Wednesday, July 7, 2010

அதிரையில் 3 நாள் இலவச மருத்துவ முகாம்.

அதிரை ஷிஃபா மருத்துவமனையும், M.V. நீரிழிவு மருத்துவமனையும் இணைந்து வருகிற 9,10,11 ஆகிய தேதிகளில் அதிரை ஷிஃபா மருத்துவமனையில் நீரிழிவு, பொது நலம், மனநலம் போன்ற பல்வேறு தலைப்புகளில் இலவச ஆலோசனைகளும், கருத்தரங்களும் இன்ஷா அல்லாஹ் நடத்த இருக்கிறார்கள். அது சமயம் இதய நோய்கள், உணவு பழக்கவழக்கங்கள் போன்ற தலைப்புகளில் ஒலி,ஒளி காட்சிகள் திரைகளில் காட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அனுபவமிக்க மருத்துவர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் சென்னையிலிருந்து கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள். அது சமயம் அதிரை பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Tuesday, July 6, 2010

போதை உலக கோப்பை

போதைப் பொருளால் செய்யப்பட்ட உலக கோப்பை மாடலை, கொலம்பிய போலீசார் கைப்பற்றினர்.

தற்போது உலக கோப்பை கால்பந்து தொடர் நடப்பதால், ஆங்காங்கே ரசிகர்கள் பிளாஸ்டிக்கால் ஆன மாதிரி உலக கோப்பையை வைத்துக்கொண்டு, மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த சூழலுக்கு ஏற்ப, போதைப்பொருள் கடத்துபவர்கள் மனதில் "சூப்பர்' திட்டம் உருவெடுத்துள்ளது. அதாவது போதைப்பொருளை கொண்டே, மாதிரி உலக கோப்பை தயார் செய்துள்ளனர்.

இந்த கோப்பை, அசல் போலவே 36 செ.மீ., உயரம், அடிப்பகுதியில் பச்சை நிறத்திலான பட்டை என தயார்செய்து, தங்கமுலாம் பூசப்பட்டு இருந்தது. கொலம்பிய விமான நிலையத்தில் வழக்கமாக நடந்த, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனையின் போது, கோப்பை மீது சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து கோப்பையை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பினர். இதன் முடிவில் "கோகைன்' என்ற போதைப்பொருளுடன் (11 கி.கி.,), அசிட்டோன் கலந்து உருக்கி செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.