Sunday, January 30, 2011

அய்டா தேர்தல் - நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

சவுதி அரேபியா ஜித்தா நகரில் கடந்த 19 ஆண்டுகளாக அதிரை மக்களின் நலனுக்காக இயங்கி பல சேவைகளையும் அரிய பல பணிகளையும் செவ்வனே செய்து வருகின்ற யுலுனுயு (யுனுஐசுயுஐ லுழுருவுர் னுநுஏநுடுநுPஆநுNவு யுளுளுழுஊஐயுவுஐழுN) அமைப்பின் நடப்பு ஆண்டுக்கான தலைவர் மற்றும் பொறுப்புதாரிகளுக்கான தேர்தல் கடந்த ஜனவரி 14ம் தேதி 2011 வருடம் தேர்தல் முறைப்படி நடத்தப்பட்டது.
தேர்தல் ஆணையராக ஜனாப். ஹபீப் ரஹ்மான் அவர்கள், ஜனாப். பஷீர் அஹ்மது அவர்கள் மற்றும் ஜனாப். அஜ்வா நெய்னா ஆகிய மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு அக்குழுவின் தலைமையின் கீழ் முறைப்படி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
01 ஜனாப். யு.மு. சம்சுதீன் தலைவர்
02 ஜனாப். க.மு. ஹபீப் ரஹ்மான் துணை தலைவர்
03 ஜனாப். அப்துல் காதர் ஜெய்லானி செயலாளர்
04 ஜனாப். அஹமது அஸ்லம் துணை செயலாளர்
05 ஜனாப். ர். அப்துல் அஜீஸ் பொருளாலர்
06 ஜனாப். யு. அஹமது அலி இணை பொருளாலர்

மற்றும் யுலுனுயுவின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க மேற்கண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயற்க்குழு உறுப்பிணர்கள் :
01 யு.து.தாஜிதீன் 10 அ.ர. பயாஸ் அகமது
02 நெய்னா அஜ்வா 11 அ. அப்துல்பரக்கத்
03 ஜபருல்லாஹ் 12 ஆ. முகம்மதுயூசுப்
04 ஆ.யு. மீராசா 13 ர. பத்ருத்தீன்
05 ஆ. தமீம்அன்சரி 14 லு. சுஹைப்
06 கு. நிஜாம் 15 அ. அஹமது இப்ராஹிம்
07 தமீம் 16 ர. மீராசா
08 அமீன் 17 ர். சிஹாப்த்தீன்
09 மு. அப்துர்சக்கூர்

கவுரவ ஆலோசகர்கள் :
ஜனாப். பஷீர் அஹ்மது அவர்கள் மற்றும் ஜனாப். ரஃபீயா அவர்கள்.


இங்ஙணம் அய்டா நிர்வாகம

Wednesday, January 26, 2011

உயிர்காக்க உதவுங்கள்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் புதுத்தெருவைச் சார்ந்த சகோ.நிஹமதுல்லாஹ் [வயது 20] இருசிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் கடந்த 20-01-2011 அன்று அனுமதிகப்பட்டுள்ளார்.

தற்போது அவர் நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் மருத்துவர் ஆலோசனைப்படி உடனேயே மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பொருளுதவி வேண்டும் என்றும் மிக அவசர கோரிக்கை வந்துள்ளது.

இது குறித்த முந்தைய கோரிக்கை அதிரை எக்ஸ்பிரஸில் 16/04/2008 அன்று வெளியானதைத் தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள அதிரைவாசிகளும் நல்லுள்ளம் படைத்தவர்களும் பொருளாலும் துஆ மூலமாகவும் உதவினார்கள். (அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக. ஆமின்!)

தற்போது மிகவும் சீரியஸான நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து கடந்த ஐந்து வருடங்களாக குழாய் மூலம் சிறுநீர் கழிக்கும் நிலையில் இருப்பதாக அவரது சகோதரர் மடலிட்டு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து மீண்டும் மருத்துவ நிதிஉதவி கோரியுள்ளார்.
கீழ்காணும் அவரது மடலை வாசிப்பவர்கள் தாங்களும் தங்கள் நட்பு வட்டாரங்களிலும் இந்த கோரிக்கையை எடுத்துச் சொல்லி தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்படி அதிரை எக்ஸ்ப்ரஸ் சார்பில் மீண்டும் கோருகிறோம்.

அதிரை மற்றும் ஏனைய வலைப்பூக்களிலும், குழுமங்களிலும் இந்த கோரிக்கையை பிரசுரித்து அதிகபட்ச உதவிகள் உரியநேரத்தில் சென்றடையுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களது உதவிகளை மறக்காமல் கீழ்காணும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கவும்.

A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

அல்லாஹ்வின் நல அருள் நம் அனைவர் மீது கிட்டட்டுமாக.ஆமீன்

----------------------------------------
Assalamualikum

My brother Nihamathullah 20 years old, He was admitted in Ramachandra Hospital, porur,Chennai in 20 Jan 20011.

As a both kidney has affected and nerugenic bladder problem for past 15 years. also past five years he passed urine through cathetral tube, every three month its should be changed.


But Now His Blood serum creatitine level is 20
Blood Urea is 164 . so doctor advised to immediately start the hemodayalasis process.
Now we do the hemodayalasis process

Also he need a dialysis process for every weekly for two times.
per dialysis cost is min Rs.3000/-

insha allah after improve his body condition they will advised to kidney transplantation. its cost approx 6 lakhs.
Make a dua for his guys. and also if u possible pls help this guy.

A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

Thanking you
Best Regards
Najumudeen

Saturday, January 22, 2011

நமது அதிரை தினசரி செய்திக்கு புதிய பதிவாளர்கள் தேவை

நமது அதிரை தினசரி செய்திக்கு புதிய பதிவாளர்கள் தேவை .இது நமதூர்க்காக தொடங்கப்பட்ட வலைத்தளம்..நமதூர் மக்கள் பல்வேறு நாட்டில் இருக்கிறார்கள் அவர்களுக்கு நமதூரில் உள்ள செய்திகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல என்னத்தால் ஆர்வம் உள்ள ஒரு சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட வலைத்தளம். இது நமதூரின் செய்திகள்,அரசியல் கூட்டங்கள்,நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு செய்திகளை வெளியிடும். யாருக்கும் துணை போகாது நமது அதிரை தினசரி செய்தி நடுநிலையான வலைதளமாக செயல்படும். ஊரில் உள்ளவர்கள் நமதூர் செய்தி மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.வெளிநாட்டில் உள்ளவர்கள் அங்கு உள்ள வேலை வாய்ப்பு பற்றியும் இங்கு பதியலாம். இதில் ஆர்வம் உள்ளவர்கள் உங்களது பெயர்,முகவரி,போன் நம்பர் மற்றும் மின் அஞ்சல் ஆகியவற்றை adiraidailynews@gmail.comஎன்ற மின் அஞ்சலுக்குஅனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்

Friday, January 7, 2011

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி அழைப்பிதழ்



இடம்: சாரா மண்டபம் (சேதுச் சாலை)
நாட்கள்: 2011 ஜனவரி 14 & 15 (வெள்ளி – சனி)
பயன் பெறுவோர்: 9th, 10th, 11th, 12th மற்றும் கல்லூரி மாணவர்கள்


பயிலரங்குகள் * கருத்தாய்வுகள் * கூட்டுக் காணொளி
இவற்றில் முனைப்புடன் பங்குபற்றும் மாணவர்களுக்குப் பரிசில்களும் அன்பளிப்புகளும் காத்திருக்கின்றன!. விரைந்து முன்பதிவு செய்யுங்கள் !!.
தொடர்புக்கு:
  • அப்துர்ரஹ்மான் – செல்: 9790485011
  • அப்துல்காதிர் – செல்: 9894667215
  • ஹஸ்ஸான் – செல்: 9840352822
முதல் நாள்:

14 – 01 – 2011 வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள்:காலை ஒன்பது மணி: கல்விக் கண்காட்சி/ காலை பத்து மணி முதல் பன்னிரண்டு வரை பயிலரங்குகள்
டாக்டர் பேராசிரியர் ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
"உனக்குள் உன்னைத் தேடு!"
(மாணவர்களுக்கான கல்வி ஊக்கப் பயிற்சி)

ஜுமுஆ தொழுகைக்கான இடைநிறுத்தம். (பகல் உணவு (முன்பதிவு செய்துகொண்ட மாணவர்களுக்கு மட்டும்)
மாலை நான்கு மணி முதல்

டாக்டர் பேராசிரியர் ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
"அறிமுகமில்லாத அரிய படிப்புகள்"


(மஃரிப் தொழுகைக்கான இடைவேளை.)



"செய்தித்துறை (மீடியா) பற்றிய காணொளிப் பயிற்சி"
(வீடியோ கான்ஃபரன்ஸ்)
வழங்குபவர்: "யூனிட்டி மீடியா நியூஸ்.காம்" செய்தி ஆசிரியர்
தவ்லத்கான்

இஷாத் தொழுகையுடன், முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவு.....




இரண்டாம் நாள்
15 – 01 – 2011 சனிக்கிழமை நிகழ்ச்சிகள்:

மாலை நான்கு மணி.


தலைமை:
அதிரை அறிஞர், 'தமிழ்மாமணி', புலவர்,
அல்ஹாஜ் அஹ்மத் பஷீர் M.A., M.Ed.

கருத்துரை வழங்குவோர்:
பேராசிரியர் பரகத் M.A., M.Phil., PGDCA., PGDTE.
பேராசிரியர் அ.மு. அன்வர் M.A., M.Phil., B.Ed.

மஃரிபுத் தொழுகை இடைவேளை

சிறப்புச் சொற்பொழிவு:

C.M.N. சலீம் M.A.(Political Science)
சமூக நீதி அறக்கட்டளை நிறுவனர், சமூகமுரசு ஆசிரியர், கல்வி ஆலோசகர்.
தலைப்பு:
"இன்றைய கல்வி – ஓர் இஸ்லாமியப் பார்வை"


* மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமான மறுமொழிகள் வழங்கப்படும்.
* சிறந்தவை எனத் தேர்ந்தெடுக்கப்படுபவை நல்ல பரிசில்களைப் பெறும்.
இஷாத் தொழுகை / இரவுச் சிற்றுண்டி: (பதிவு பெற்ற மாணவர்களுக்கு மட்டும்.)

Tuesday, January 4, 2011

இந்தியர் வெளியில் சிந்தும் உழைப்பு

நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி
தனியார்வ நோக்கில் தணியாத தாகம்
இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்
நனிசிறந்தே வாழ்வர் நவில்.

கடின உழைப்பும் கடமை யுணர்வும்
படியும் குணமும் பலமான போட்டியுறும்
சந்தையில் இன்று சிறப்பான எங்கள்
இந்தியர் என்றே இயம்பு.

காடும் மலையும் கடலுமே தாண்டி
வாடும் உடலும்தம் உள்ளமும் வேலையில்
ஈடுபட்டுத் தேனீயென் றீட்டிட இந்தியர்
பாடு படுவதைப் பாடு!


சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே
இந்தியச் சந்தை இழந்த உழைப்பினை
அன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்
தன்னிறை என்பதுஎந் நாள்


“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

Saturday, January 1, 2011

கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்காக' உருவாக்கப்பட்ட இலச்சினை LOGO

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2011,ஜனவரி 14-15,வெள்ளி & சனிக்கிழமைகளில் நமதூரில்'கல்வி விழிப்புணர்வு மாநாடு' நடைபெறவுள்ளதை அறிவீர்கள்.

முதல் நாள் (14.01.2011) நிகழ்ச்சியில் இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்கள் 'உனக்குள் உன்னைத் தேடு' எனும் தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

"அடுத்த தலைமுறையைப் படித்த தலைமுறையாக்கிட" முழக்கத்தோடு 'சமூகநீதி அறக்கட்டளை'யும் 'சமூகநீதி முரசு' எனும் இதழும் நடத்திவருபவரும் நமது சமுதாயம் கல்வியில் உயரவேண்டும் என்பதற்காகவே பல ஊர்களிலும் சென்று பிரச்சாரம் செய்பவருமானசகோ. முஹம்மது ஸலீம் (CMN) இரண்டாம்நாள் (15.1.2011) நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். மாநாட்டில் வினா-விடைப் பகுதியும் இடம்பெறவுள்ளது, இன்ஷா அல்லாஹ்.



விரிவான நிகழ்ச்சி நிரல் இங்கு விரைவில் பதிவு பெறும். நமதூரில் நடைபெறும் முதல் 'கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்காக' உருவாக்கப்பட்ட இலச்சினை LOGO இங்கு அறிமுகப் படுத்தப்படுகிறது - நீங்கள் பிறருக்கு அறிமுகப் படுத்துவதற்காக!

மாநாடு சிறப்புற நடைபெறவும் அதனால் நம் மாணவர்கள் பயன்பெறவும் வேண்டுமென எல்லாரும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் அருள் புரிவான்.

இவண்

அதிரை கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டுக் குழு
Adirai Educational Awareness Conference - Team