Wednesday, August 31, 2011

அதிரையில் நோன்புப் பெருநாள் தொழுகை (காணொளி )_

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்று காலை 8 மணியளவில் ஈதுப்பெருநாள் தொழுகை அதிரை சானா வயலில் அமைந்துள்ள முஸல்லாவில் (மைதானத்தில்) பெருந்திரளாக குழுமிய அதிரை பொதுமக்களின் பேராதரவுடன் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பெருநாள் குத்பா உரையில், ரமலானுக்குப் பின் நம்முடைய அமல்கள் குறித்தும், இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்பு தேடுதல் குறித்தும் வலியுறுத்துப்பட்டன.

தொழுகைக்காக மக்கள் அதீதமாக பெருகியுள்ள நிலையிலும் இன்னும் பெருநாள் குத்பாவில் அமராமல் உடன் எழுந்து செல்பவர்களும், வலியுறுத்தியும் குத்பாவின் அவசியத்தை உணராத மக்கள் இன்னும் சிலர் உள்ளார்கள் என்பது வருந்தத்தக்கதே, இந்நிலை வரும் காலங்களில் மாறிட ஏகத்துவ சகோதரர்கள் தேவையான விழிப்புணர்பை ஏற்படுத்த முயல வேண்டும்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி பகுதிகளில் விரிவான ஏற்பாடுகளை ஈத் கமிட்டியினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.




நன்றி அதிரை bbc

Tuesday, August 30, 2011

மரண அறிவிப்பு

புதுமனைத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் அ.வா.மு. அபூஹனிபா அவர்களின் மகளும், மர்ஹும் மு.வா.மு.சேக் அப்துல் காதர் அவர்களுடைய மனைவியும், ஹாஜி அ.வா.மு.முகைதீன் சாஹிப், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது மைதீன், ஹாஜி. அ.வா.மு. முகம்மது இப்றாஹிம் அவர்களுடைய சகோதரியுமாகியஹாஜிமா. சல்மா அம்மாள் அவர்கள் இன்று (30-08-2011) செவ்வாய் கிழமை மணிக்கு மாலை வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11:30மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

பெருநாள் (திடல்) தொழுகை

இன்ஷா அல்லாஹ் பெருநாள் அன்று திடல் தொழுகைக்கு TNTJ அதிரை கிளையின் சார்பாக சேது சாலையில் உள்ள ஜகபர் அலி அவர்களின் இடத்தில் காலை7:30 மணிக்கு நடைபெற உள்ளது .
பெருநாள் குத்பா பேருரையை அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஷி நடத்துகிறார் இதற்க்கான ஏற்பாடுகளை நகர TNTJ சிறப்பாக செய்து வருகிறது .

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது .
தகவல் :ஜப்பார்

Sunday, August 28, 2011

அதிரை தினசரி செய்தி குழு அறிவிப்பு

அன்புள்ள அதிரை தினசரி செய்தி வாசகர்களுக்கு சில மாதங்களாக இயங்காமல் இருந்த நமது இனைய தளம் தற்போது இருந்து இயங்க உள்ளது.அதிரையில் உள்ள செய்திகள் இனி நமது தளத்தில் பதியப்படும்.தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.
இப்படிக்கு:
அதிரை தினசரி செய்தி குழு

Saturday, August 27, 2011

முஸ்லீம் லீக் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி(27:08:2011) நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு என் ஆர் ரங்க ராஜன் அவர்களும் முஸ்லிம் லீகின் மாவட்ட தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் , பேரூர் மன்ற துணைத்தலைவர் இராம குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .





இதற்க்கான ஏற்பாட்டினை நகர முஸ்லிம் லீக் தலைவர் கேகே ஹாஜ நஜ்முதீன் , மாவட்ட இளைஞர் அணிஅமைப்பாளர்அட்வகேட் முனாஃப் .மாவட்ட பிரதிநிதி எம் ஆர் ஜமால் முகமத் ,நகர இளைஞர் அணி அமைப்பாளர் எம் எ. சாகுல் ஹமீத் ,SBIஷேக் அப்துல்லாஹ் உள்ளிட்ட நகர நிர்வாகிகள்சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
thanks to adiraixpress