Monday, September 16, 2019

மரண அறிவிப்பு-பஜ்ரியா அம்மாள்

அதிரை கீழதெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முகமது மீராசாகிப் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.மு. முகமது உசேன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.மு. மொய்தீன் அப்துல் காதர், மர்ஹூம் மீ.மு. முகமது ராவுத்தர் ஆகியோரின் சகோதரியும், M. முகம்மது புகாரி, N.M. அப்துல் வஹாப், P.O. பக்கீர் முகமது ஆகியோரின் மாமியாரும், M. நெய்னா முகமது, M. முகமது தமீம் ஆகியோரின் தாயாரும், N. அகமது ரஜாளி, M. அப்துல் ரஹ்மான், N. அப்துல் ஹக்கீம், P. அப்துல் ஹக்கீம், N. ஜாகிர் உசேன், M. அகமது உசேன் ஆகியோரின் உம்மம்மாவுமான ஹாஜிமா பஜ்ரியா அம்மாள் அவர்கள்  இன்று வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு  பெரிய ஜும்மா  பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அதிரை அல் -அமீன் பள்ளியின் முக்கிய வேண்டுகோள்

அதிரை அல் -அமீன் பள்ளியின் முக்கிய வேண்டுகோள்

Sunday, September 15, 2019

மரண அறிவிப்பு-3எம் அப்துல் ரஹ்மான்

அதிரை ஆலடி தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும் மர்ஹூம்  அப்துல் ஹக்கீம், மர்ஹூம் அப்துல் ஃபத்தாஹ் ஆலிம், திரியெம் ஹாஜி முஹம்மது மீராசாஹிப், முஹம்மது அபூபக்கர், மர்ஹூம் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் அ. க. முஹம்மது ஷரீஃப், M H முஹம்மது ஃபாஸி , A H அப்துர் ரவூஃப் ஆகியோரின் மாமனாருமான மு.மு. அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று 4.30 மணியளவில் மாலை அவர்களின் ஆலடித்தெரு வீட்டில் மரணம் அடைந்தார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும்.

மரண அறிவிப்பு -அப்துல் ஜப்பார்


அதிரை நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வா.அ.அகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும்,  மர்ஹூம் அகமது மக்தூம், சரபுதீன், அஜ்மல்கான் ஆகியோரின் சகோதரரும்,  s.முகமது ஜமீல், அப்துல் ரஹீம், முகமது இம்தியாஸ் ஆகியோரின் மாமனாரும், அகமது இப்ராஹீம், ஜுபைர் ஆகியோரின் தகப்பனாருமான அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று பகல் 3,00 மணியளவில் ஆஸ்பத்திரி தெரு உள்ள இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன் அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


ஏண்டா கோஸ்ட் கோவாலு இதுலையுமாடா .......


அதிரையில் ஆற்று நீர் வந்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் ஆற்று நீரோடு சேர்ந்து வருகிறது.குறிப்பாக  அதிரை  பகுதி கடைமடை பகுதியாக இருக்கும் நிலையில் சில வருடங்களாக நீர் ஆர்வலர்கள் கடும் முயற்சியில் ஆற்று நீர் குளங்களுக்கு வருகிறது.வரும் பாதைகளில் எத்தனையோ இடைஞ்சல்கள் மத்தியில் ஆற்று நீர் குளத்திற்கு செல்லும்.இதில் தற்போது  அரசியல் காழ்ப்புணச்சியும் ஈகோ என்கின்ற கொடும்  வியாதியும் தொற்றி கொண்டு அரசியல்வாதிகளை பாடாய்படுத்தி வருகிறது.

ஆக கோஸ்டு கோவாலு ஆகிய நான் சொல்லவருவது குடிநீர் உலகில் பிறந்த அணைத்து உயிர் இனங்களுக்கும் அவசியம் .குடிநீருக்காக போராடும் அனைத்து உள்ளங்களும் அதிரை மக்களால் ஆண்டாண்டு காலம்  போற்றப்படும் மண்ணின் மைந்தர்களே.

காழ்ப்புணர்ச்சியை விட்டு விட்டு கள முயற்சியில் இறங்குங்கள் ........  கோஸ்ட் கோவாலின் கருத்துக்கள் தொடரும் 

அதிரையில் உயிர்களை காவு வாங்க துடிக்கும் நாய்கள் கூட்டம்

அதிரை பகுதியில் தற்போது சில மாதங்களாக  அதிகளவில் தெருக்களில்  நாய்கள் சுற்றித்திரிகின்றன.ரோட்டில் செல்லும்பொதுமக்களை துரத்தி கடிக்கின்றன.

மேலும் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில்இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.கஜா புயலுக்கு பின்னர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து உணவு இன்றி பசி வெறியில்  ஊர் பகுதிகளில் புகுந்து தெருக்களில் செல்லும் பொதுமக்களை துரத்தும் நிகழ்வுகள் பல நடந்து வருகிறது.

மேலும் இரவு நேரங்களில் செல்லும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர.இதனை அவசர நிலையாக கருத்தில் கொண்டு அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.




மரண அறிவிப்பு-பெயிண்டர் மைதீன்

அதிரை சுரைக்கா கொல்லை பகுதியை சேர்ந்த கொழும்பார் என்கின்ற முஹம்மது ஜமால் அவர்களின் இளைய மகனும் உவைஸுல் கருணை,செய்யது முஹம்மது,நூர் முஹம்மது அவர்களின் தம்பியான பெயிண்டர் முகைதீன் அவர்கள் இன்று அதிகாலை வபாத்திவிட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

மரண அறிவிப்பு -சித்தி பாத்திமா

ஆஸ்பத்திரிதெருவை சேர்ந்த மர்ஹும்  சேக் முஹம்மது அவர்களின் இளைய மகளும், மர்ஹும் அஹமது ஹாஜா அவர்களின் மருமகளும் அன்வர் அவர்களின் மனைவியும், சேக் மீரான், ரிஜ்வான், அர்சத் அஹமது ஆகியோரின் தாயாரும், அப்துல் பாரி,  பைசல்  அஹமது, அஹமது அஸ்லம் ஆகியோரின் மாமியாருமாகிய சித்தி பாத்திமா வயது 58 அவர்கள் இன்று15-09-2019 காலை திருச்சியில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, September 13, 2019

அதிரையில் நாளை புஹாரி ஷரீப் நிறைவு

அதிரையில் நாளை  புஹாரி ஷரீப் நிறைவையொட்டி சென்னை உட்பட பல ஊர்களில் இருந்து அதிரை வாழ் பொதுமக்கள் வருகைபுரிந்து கொண்டு உள்ளனர்.இந்நிலையில் நாளை புஹாரி ஷரீப் நிறைவை முன்னிட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



புது பொழிவுடன்அதிரை தினசரி செய்திகள்

அதிரை தினசரி செய்திகள் இன்னும் புது பொழிவுடன் வளம் வர இருக்கிறது ...அன்புள்ள வாசர்களே உங்களுடைய மேலான கருத்துகளை adiraidailynews@gmail.com க்கு அனுப்பவும்...சிறிது காலம் இயங்காமல் இருந்த இந்த வலை தளம் தற்போது இயங்க உள்ளது அதிரையில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே அளிக்க காத்து இருக்கிறது.