அதிரை பகுதியில் தற்போது சில மாதங்களாக அதிகளவில் தெருக்களில் நாய்கள் சுற்றித்திரிகின்றன.ரோட்டில் செல்லும்பொதுமக்களை துரத்தி கடிக்கின்றன.
மேலும் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில்இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.கஜா புயலுக்கு பின்னர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து உணவு இன்றி பசி வெறியில் ஊர் பகுதிகளில் புகுந்து தெருக்களில் செல்லும் பொதுமக்களை துரத்தும் நிகழ்வுகள் பல நடந்து வருகிறது.
மேலும் இரவு நேரங்களில் செல்லும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர.இதனை அவசர நிலையாக கருத்தில் கொண்டு அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!