Sunday, February 13, 2011

அதிரையில் சுகாதார விழா

அதிராம்பட்டினத்தில் நாளை 14-02-2011 திங்கள் அன்று தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் சார்பாக‌ சுகாதார விழா காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அச்சமயம் காலை 8.00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் S.சண்முகம் அவர்கள் தலைமையில்மத்திய இணையமைச்சர் S.S.பழநிமாணிக்கம்அவர்கள் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைக்கிறார். பிரபல முன்னணி மருத்துவர்களால் ஸ்கேன் போன்ற அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து பயன் பெறலாம். உடல் ஊனமுற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மாற்றுத் திறனாளிக்கான‌ அடையாள அட்டையும் வழங்கப்படும்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!