Monday, May 31, 2010

மாணவ,மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அதிரை பைத்துல்மால்

அதிரை பைத்துல்மால் 12 -வது திருகுர்ஆன் மாநாடு முன்று நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்தது.
நேற்றைய நடந்த திருகுர்ஆன் மாநாடு நிகழ்ச்சியில் நமதூர் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் SSLC தேர்வில் 482 மதிப்பெண்கள் பெற்று. அதிரை பள்ளிகளிலேயே முதலிடம் பெற்ற கரையூர் தெருவைச் சேர்ந்த மாணவி R. இந்துமதி மாணவிக்கு நமதூர் மாஜ்தா ஜுவல்லரி சார்பில் பைத்துல்மால் நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப்.O.K.M.சிப்ஹதுல்லாஹ் அவர்கள் தங்க மோதிரம் ஒன்றை மாநாடு மேடையில் வழங்கி சிறப்பித்தார்கள்.
இது மேலும் நமதூர் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் தரும் செயலாக அமைந்துள்ளது .
அதிரை பைத்துல்மால் நமதூர் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செயதுவருகிறது.மேலும் அதிரை பைத்துல்மாலின் வெற்றி பணிகள் தொடர அல்லாஹுதலாவிடம்துஆ செய்கிறோம்.
தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு அளித்த
ஜனாப்.O.K.M.சிப்ஹதுல்லாஹ் அவர்களுக்கு ADIRAIDAILYNEWS சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!