Saturday, June 19, 2010

ஜெர்மனிக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது செர்பியா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது. இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த அணியான ஜெர்மனி, செர்பியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். இதனால்அவ்வப்போது இரு அணி வீரர்களும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர். முதல் பாதி ஆட்டம் முடிவடைய 7 நிமிடங்கள் இருந்தபோது மெக்சிகோ வீரர் மிலன் ஜொவானோவிக் கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தார். முதல் பாதி ஆட்டநேர முடிவில் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சியை செர்பியா வீரர்கள் தடுப்பாட்டத்தால் தகர்த்தனர். ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பையும் ஜெர்மனி தவறவிட்டது. இறுதியில் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் க்ளோஸ், ரெட் கார்டு பெற்று ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஜெர்மனி தரப்பில் 3 வீரர்களும், செர்பியா தரப்பில் 4 வீரர்களும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர்.
முதல் ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி 4-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!