
கடந்த 13/09/2010 அன்று அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான குழு கூடியது..
அதற்கு முன்தினம் செக்கடி பள்ளிவாசல் வளாகத்தில் அப்துல் லத்தீப் ஆலிம் அவர்கள் தலைமையில் கூடிய கூட்டத்தில் புது நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக 30 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

அதன்படி மரைக்கா பள்ளிவாசலில் கூடிய அந்த குழு புதிய தலைவராக ஜனாப் உமர் அவர்களையும், பொருளாளராக ஜனாப் S.A.M . ஜமாலுதீன் அவர்களையும், செயலாளராக ஜனாப் ஹசன் அவர்களையும் தேர்ந்தெடுத்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், மற்றும் செயலாளர் ஆகியோர்களுக்கும், முன்னாள் செயலாளர் ஜனாப் அபூபக்கர் அவர்களுக்கும்
சுகாதார முன்னேற்ற கழகம். (சுமுக) தலைவர் ஜனாப் அஸ்லம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்
செய்தி:
adiraiunity
அஸ்லம் பாய் பழுத்த அரசியல்வாதியாய் மின்னுகிறார். சமூக அக்கரை கொண்டவர். நோன்பு நோற்று சுபுஹு தொழுதவுடன் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். சுமுக என்று பெயரிட்டு அவர் மேற்கொண்ட பணிகளை ஊரே மெச்சுகிறது.
ReplyDeleteஅவரைப்போன்றவர்கள் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். அவர் அவசியம் காங்கிரஸில் இணைந்து சாச்சாவுடன் பணியாற்றவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆவண செய்வாரா?
This comment has been removed by a blog administrator.
ReplyDelete