Monday, September 13, 2010

சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு உலமாக்களின் ஆலோசனையில் பேரில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
அதன்படி இன்று காலை 10 மணியளவில் மஸ்ஜிதுல் அக்ஸா (மரைக்காயர் பள்ளி) நடைபெற்ற மசூராவிற்கு மரியாதைக்குரிய ஆலிம்கள் அப்துல் லத்தீப் ஆலிம், அப்துல் காதிர் ஆலிம், மற்றும் ஜனாப் வக்கீல் ரஜாக் ஆகியோர் தலைமையில் சுமார் 30 பேர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்களிடம் நிர்வாக பொறுப்புகளுக்கு கருத்துக்கள் கேட்கப்பட்டது.
பின்னர் பல்வேறு கருத்துக்களின் அடிப்படையிலும், திறமை, அனுபவம் அடிப்படையிலும் உலமாக்களுடன் ஆலோசிக்கப்பட்ட புதிய நிர்வாகம் அறிவிக்கப்பட்டது. அதன்படி,
ஜனாப் முகம்மது உமர் - தலைவர்
ஜனாப் சஹாபுதீன் - துணைத் தலைவர்
ஜனாப் S. அபுல் ஹசன் - செயலாளர்
ஜனாப் பாக்கர் ஹாஜியார் - துணைச்செயலாளர்
ஜனாப் SAM ஜமாலுதீன் - பொருளாளர்
ஆகியோரை தேர்ந்தெடுத்ததாக ஜனாப் வக்கீல் ரஜாக் அவர்கள் அறிவித்தார்கள்.
அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மிகவும் பொருத்தமான நிர்வாகம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய நிர்வாகிகளின் அடுத்த அமர்வு நாளைக் காலை 10 மணியளவில் மரைக்காயர் பள்ளியில் நடைபெறும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் ஜனாப் உமர் அவர்கள் அறிவித்தார்கள்.
இனி வரும் காலங்களில் இந்த புதிய நிர்வாகத்துடன் ஐந்து ஆலிம்கள் பங்குபெற்று கூட்டங்களில் கலந்துகொண்டு மார்க்க அடிப்படையிலான தீர்ப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!